தமிழகத்தைச் சேர்ந்த கிரிகெட் வீரர் நடராஜனை அவுஸ்திரேலிய கிரிகெட் வீரர் ஒருவர் தமிழில் வாழ்த்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், “வாழ்த்துகள் நட்டு” என தமிழிலேயே வாழ்த்துத் தெரிவித்து பேச்சை தொடங்கினார்.
அதன் பின் “நீங்கள் உண்மையாகவே ஒரு சிறந்த வீரர். நீங்கள் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு அருமையான மனிதர். எங்கள் அணியில் நீங்கள் இருப்பதை அனைவரும் விரும்புகிறோம். வாழ்த்துகள்” என்றார் வார்னர்.
நடராஜன் குறித்த மற்றொரு கேள்வியின் போது, “நான் நடராஜனின் அணித் தலைவராக இருப்பது என் அதிர்ஷ்டம். அவர் ஓர் அருமையான மனிதர். மிகவும் தன்மையானவர். அவர் அருமையான திறன் படைத்தவர். ஐபிஎல் 2020 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டு, தன் மனைவியின் பிரசவத்துக்குக் கூட செல்லாமல், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் வலைப் பந்து வீச்சாளராகச் சென்று, அனைத்து ரக போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். எவ்வளவு பெரிய சாதனை இது” என பாராட்டியிருக்கிறார் வார்னர்.
அதே போல செய்தியாளர் கேட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது. “நடராஜனுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஐபிஎல் 2021-ல் நடராஜன் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் காண ஆவலோடு இருக்கிறேன். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும். சூழ்நிலைக்கேற்ப எப்படி பந்து வீச வேண்டும் என்பதை அவர் அறிவார்” என புகழ்ந்து தள்ளிவிட்டார் டேவிட் வார்னர்.
“நேற்று நடராஜனுக்கு, அவரது ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை நேரடியாகப் பார்த்தோம். அதைப் பார்க்க அத்தனை பெருமையாக இருந்தது” எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் வார்னர்.
பிற செய்திகள்:
- வகுப்பறையில் மயக்கமுற்ற மாணவருக்கு நேர்ந்த கதி..!
- இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தந்தையா? சிக்னல் சந்தியில் நடந்த நெகிழ்வு சம்பவம்!
- இலங்கையர்களுக்கு நற்செய்தி-வெகு விரைவில் எங்களுக்கும் தடுப்பூசி!
- “இந்த 4 கிலோ மணலும்… அப்படியே தங்கமா மாறும் பாருங்க” – கூட்டாளிகளுடன் சேர்ந்து நண்பனே ஏமாற்றிய கதை…
- சிறுமிக்கு சித்தப்பாவால் நடந்த கொடூரம்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு
- ஜோ பைடன் இறந்தால் தமிழ் பெண் கமலா ஹாரிஸின் நிலை மாறும்; சட்டம் சொல்லும் உண்மை!
- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்; இப்படியும் ஒரு ஜனாதிபதியா? வியக்கும் உலக மக்கள்!
- “சசிகலாவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்!
- திருகோணமலைக்கு சீமெந்து ஏறிச்ச சென்ற கப்பல் திடீர் விபத்து!
- தாயின் கை தவறியதால் பறிபோன குழந்தை!
- இலங்கை தமிழ் ஊடகங்களில் திடீரென பதவி விலகிய பிரபலங்கள்-மர்மம் என்ன?
- தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பாடசாலை மாணவர்கள்!
- பதுளை-வலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் வெளியான செய்தி!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்