• Apr 25 2024

13ஜ விளக்குவதற்கு தயார் - தேரர்களை சந்திப்பதற்கு தயார் - அவர்கள் தயாரா - விக்னேஸ்வரன் - கேள்வி.! SamugamMedia

Tamil nila / Mar 16th 2023, 5:49 pm
image

Advertisement

13வது திருத்ததை எதிர்கின்ற பௌத்த மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமது குழுவினர் தயாராக இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேசுவதைகளை நிறுத்தியுள்ளதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


யாழ்ப்பாண விஜயத்தின் போது 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்திருந்தாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் பௌத்தமதகுருமாரின் எதிர்ப்பை தொடர்ந்து அது குறித்த முயற்சிகளை ஜனாதிபதி கைவிட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதி 13வதுதிருத்தம் தொடர்பான தனது திட்டத்தை கைவிடவில்லை என தாம் கருதவில்லை என தெரிவித்த விக்னேஸ்வரன்   மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பினால் அதனை அவர் ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


உரிய விடயங்களை தெளிவுபடுத்த தயார் ஆனால் தேரர்கள் தங்களை சந்திக்க தயாரில்லை என தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டுமென்றும் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13ஜ விளக்குவதற்கு தயார் - தேரர்களை சந்திப்பதற்கு தயார் - அவர்கள் தயாரா - விக்னேஸ்வரன் - கேள்வி. SamugamMedia 13வது திருத்ததை எதிர்கின்ற பௌத்த மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமது குழுவினர் தயாராக இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேசுவதைகளை நிறுத்தியுள்ளதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாண விஜயத்தின் போது 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்திருந்தாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.எனினும் பௌத்தமதகுருமாரின் எதிர்ப்பை தொடர்ந்து அது குறித்த முயற்சிகளை ஜனாதிபதி கைவிட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதி 13வதுதிருத்தம் தொடர்பான தனது திட்டத்தை கைவிடவில்லை என தாம் கருதவில்லை என தெரிவித்த விக்னேஸ்வரன்   மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பினால் அதனை அவர் ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.உரிய விடயங்களை தெளிவுபடுத்த தயார் ஆனால் தேரர்கள் தங்களை சந்திக்க தயாரில்லை என தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டுமென்றும் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement