இத்தாலிய தீவின் அருகே கடலில் மூழ்கி 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாலியின் லம்பேடுசா தீவின் கடற்கரையில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்தததாகவும், கப்பலில் பயணித்த 40 பேர் இத்தாலிய கடலோரக் காவல்படையினரால் இரவோடு இரவாக மீட்கப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள லம்பேடுசாவில் உள்ள முக்கிய துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்தி நிறுவனம் ANSA தெரிவித்துள்ளது.
இத்தாலி அதிகாரிகள் 156 பேரை ஏற்றிச் செல்லும் மற்றொரு மூன்று படகுகளையும் லம்பேடுசாவுக்கு அழைத்துச் சென்றனர், இது ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் மக்களின் முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாகும்.
வட ஆப்பிரிக்காவிலிருந்து அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்வதாக இத்தாலி கூறுகிறது.
2022-ஆம் ஆண்டில் சுமார் 105,140 புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக இத்தாலியை அடைந்துள்ளதாக உள்துறை அமைச்சக தரவுகள் காட்டுகின்றன. முன்னதாக, 2021-ல் 67,477 பேரும் மற்றும் 2020-ல் 34,154 பேரும் இத்தாலியை அடைந்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டில் மத்திய மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோது கிட்டத்தட்ட 1,400 புலம்பெயர்ந்தோர் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
இத்தாலி அருகே கடலில் மூழ்கி 8 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு ; 40 பேர் கப்பலில் இருந்து மீட்பு இத்தாலிய தீவின் அருகே கடலில் மூழ்கி 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இத்தாலியின் லம்பேடுசா தீவின் கடற்கரையில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்தததாகவும், கப்பலில் பயணித்த 40 பேர் இத்தாலிய கடலோரக் காவல்படையினரால் இரவோடு இரவாக மீட்கப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள லம்பேடுசாவில் உள்ள முக்கிய துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்தி நிறுவனம் ANSA தெரிவித்துள்ளது.இத்தாலி அதிகாரிகள் 156 பேரை ஏற்றிச் செல்லும் மற்றொரு மூன்று படகுகளையும் லம்பேடுசாவுக்கு அழைத்துச் சென்றனர், இது ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் மக்களின் முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாகும்.வட ஆப்பிரிக்காவிலிருந்து அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்வதாக இத்தாலி கூறுகிறது.2022-ஆம் ஆண்டில் சுமார் 105,140 புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக இத்தாலியை அடைந்துள்ளதாக உள்துறை அமைச்சக தரவுகள் காட்டுகின்றன. முன்னதாக, 2021-ல் 67,477 பேரும் மற்றும் 2020-ல் 34,154 பேரும் இத்தாலியை அடைந்துள்ளனர்.2022-ஆம் ஆண்டில் மத்திய மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோது கிட்டத்தட்ட 1,400 புலம்பெயர்ந்தோர் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.