• Apr 25 2024

இறைவனோடு இணைக்கும் 9 விதமான பக்தி முறை!

Tamil nila / Dec 24th 2022, 7:47 pm
image

Advertisement

கருவறையில் இருக்கும் போதே, நாரத முனிவர் சொல்ல இறைவனின் நாமத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர் பிரகலாதன். அதன் காரணமாக அசுர குலத்தில் அவதரித்திருந்த அவர், இறைவனின் சிந்தனையில் இருந்து மக்களுக்கு நல்லாட்சி புரிந்தார். 


எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்த காரணத்தால், தந்தையே அவரைக் கொல்ல பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது. சிறுபிள்ளையாக இருந்த பிரகலாதனை, அவரது தந்தை இரண்யகசி முறையான கல்வியைக் கற்பதற்காக குருகுலத்திற்கு அனுப்பிவைத்தான். அங்கு சென்று கல்வி அறிவோடு, ஆன்மிக அறிவையும் வளர்த்து வந்தார் பிரகலாதன்.


கல்வியை முடித்து வந்திருந்த பிரகலாதனிடம் 'நீ படித்ததிலேயே உத்தமமான விஷயம் எது?' என்று இரண்யகசிபு கேட்டான். அப்போது தந்தையின் மடியில் அமர்ந்தபடியே, 9 விதமான பக்தியைப் பற்றிக் பிரகலாதன் கூறினார்.  பிரகலாதன் தன்னுடைய தந்தைக்கு கூறிய  9 விதமான பக்தியைப் பற்றி அறிந்து கொள்வோம்.



1. சிரவணம்:- இறைவனின் பெருமைகளைக் காதால் இடைவிடாமல் கேட்பது 'சிரவணம்' என்னும் பக்தி முறையாகும். சொற்பொழிவு போன்ற விஷயங்கள் இதில் அடங்கும். பெரும் சாபத்திற்கு உள்ளாகியிருந்த அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மன்னன்,  தன்னுடைய இறுதிக் காலத்தில் சுகபிரம்ம மகரிஷி கூறிய பாகவதத்தைக் கேட்டுஇ மனம் அமைதியுற்றான்.  


2. கீர்த்தனம்:- நம் வாயால் இடைவிடாமல் இறைவனின் புகழைப் பாடுவதையே, 'கீர்த்தனம்' என்கிறோம். இது பாடலால் இறைவனை அடையும் பக்தி முறை. சடகோபர் பாடிய பாடல்களால் சுகம் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். சுகப்பிரம்ம மகரிஷியும் கூட, தன் கீர்த்தனங்களால் இறைவனைப் புகழ்ந்தவர். 


3. ஸ்மரணம்:- நாவால் சத்தமாக இறை வனின் நாமத்தை உச்சரிப்பது, 'ஸ்மரணம்' என்னும் பக்தி வழிபாடாகும்.  


4. பாதசேவை:- எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் குறையாத பக்தியோடு இறைவனின் பாதங்களுக்குச் செய்யும் சேவையே, 'பாதசேவை' என்னும் பக்தி முறை. இந்த மகத்தான இறை வழிபாட்டை முறையாக, எப்போதும் செய்யும் பெரும் பேறுப் பெற்றவர் லட்சுமிதேவி. இவர் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து, அவரின் பாதங்களை பிடித்துவிடும் பணியில் எப்போதும் ஈடுபட்டிருப்பவர். 


5. அர்ச்சனை:- மனதில் எந்த களங்கமும் இல்லாமல், மலர்களைக் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் பூஜையே 'அர்ச்சனை' என்னும் பக்தி முறை. இறைவனுக்கு அர்ச்சனை செய்து அதன் வாயிலாக பெரும் பேறுபெற்றவர்களில், துருவன் வம்சத்தில் வந்த பிருது மகாராஜா முக்கியமானவர். அவரைப் போல அர்ச்சனை செய்தவர்கள் வேறுயாரும் இல்லை என்கிறது புராணங்கள். 


 6. வந்தனம்:- எட்டு அங்கங்களும் நன்றாக நிலத்தில் படும்படி, இறைவனை வணங்குவது 'வந்தனம்' ஆகும். மகாவிஷ்ணு, கண்ணனாக அவதரித்திருந்த காலகட்டத்தில், கம்சனின் அரசவை அமைச்சராக இருந்தவர் அக்ரூரர். இவர் கண்ணனுக்கு சித்தப்பா முறை. கம்சனின் மறைவுக்குப் பின், கண்ணனின் ஆலோசகராக இருந்தவர். இவர் கண்ணனை வந்தனம் செய்து சிறப்பு பெற்றவர். 


7. தாஸ்யம்:- இறைவனுக்கு பணியாளனாக இருந்து நேசத்துடன் தொண்டு செய்வது 'தாஸ்யம்' என்னும் பக்தி முறை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற ரீதியில் இறைவன் மீது பக்தி செலுத்தும் சிறப்பான வழிபாட்டு முறை இது. குறித்த வழிபாட்டில் அனுமனை விட சிறப்பானவர்கள் எவரும் இல்லை. அவர் ராமரின் தாசர் என்றே பெயர் பெற்றவர். 


8. சக்யம்:- இறைவனை தன்னுடைய பக்தனாக நினைத்து அவருடன் நட்பு கொள்வது 'சக்யம்' என்னும் பக்தி முறை. தன்னுடன் இருப்பது இறைவன் என்று அறிந்திருந்தாலும், அவரைத் தன்னுடைய நண்பனாக பாவித்து, அனைத்து நல்லது கெட்டதுகளையும் பக்தி கொண்டு பாசம் காட்டும் ஒரு வழிபாட்டு முறை.


9. ஆத்மநிவேதனம்:- தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் எந்தவித தயக்கமும் இன்றி, இறைவனுக்கு அர்ப்பணிப்பதே 'ஆத்மநிவேதனம்' என்னும் பக்தி முைற. இதனை 'சரணாகதி' வழிபாடு என்றும் கூட சொல்லலாம். வாமனனாக தன் முன் நின்றிருந்த இறைவனுக்கு, தன்னிடம் இருந்த அனைத்தையும். தன்னையும் சேர்த்து அளித்து அழியாப் புகழ் பெற்ற மகாபலி சக்கரவர்த்தியை. இந்த பக்திக்கு உதாரணமாக்கலாம்.

இறைவனோடு இணைக்கும் 9 விதமான பக்தி முறை கருவறையில் இருக்கும் போதே, நாரத முனிவர் சொல்ல இறைவனின் நாமத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர் பிரகலாதன். அதன் காரணமாக அசுர குலத்தில் அவதரித்திருந்த அவர், இறைவனின் சிந்தனையில் இருந்து மக்களுக்கு நல்லாட்சி புரிந்தார். எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்த காரணத்தால், தந்தையே அவரைக் கொல்ல பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது. சிறுபிள்ளையாக இருந்த பிரகலாதனை, அவரது தந்தை இரண்யகசி முறையான கல்வியைக் கற்பதற்காக குருகுலத்திற்கு அனுப்பிவைத்தான். அங்கு சென்று கல்வி அறிவோடு, ஆன்மிக அறிவையும் வளர்த்து வந்தார் பிரகலாதன்.கல்வியை முடித்து வந்திருந்த பிரகலாதனிடம் 'நீ படித்ததிலேயே உத்தமமான விஷயம் எது' என்று இரண்யகசிபு கேட்டான். அப்போது தந்தையின் மடியில் அமர்ந்தபடியே, 9 விதமான பக்தியைப் பற்றிக் பிரகலாதன் கூறினார்.  பிரகலாதன் தன்னுடைய தந்தைக்கு கூறிய  9 விதமான பக்தியைப் பற்றி அறிந்து கொள்வோம்.1. சிரவணம்:- இறைவனின் பெருமைகளைக் காதால் இடைவிடாமல் கேட்பது 'சிரவணம்' என்னும் பக்தி முறையாகும். சொற்பொழிவு போன்ற விஷயங்கள் இதில் அடங்கும். பெரும் சாபத்திற்கு உள்ளாகியிருந்த அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மன்னன்,  தன்னுடைய இறுதிக் காலத்தில் சுகபிரம்ம மகரிஷி கூறிய பாகவதத்தைக் கேட்டுஇ மனம் அமைதியுற்றான்.  2. கீர்த்தனம்:- நம் வாயால் இடைவிடாமல் இறைவனின் புகழைப் பாடுவதையே, 'கீர்த்தனம்' என்கிறோம். இது பாடலால் இறைவனை அடையும் பக்தி முறை. சடகோபர் பாடிய பாடல்களால் சுகம் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். சுகப்பிரம்ம மகரிஷியும் கூட, தன் கீர்த்தனங்களால் இறைவனைப் புகழ்ந்தவர். 3. ஸ்மரணம்:- நாவால் சத்தமாக இறை வனின் நாமத்தை உச்சரிப்பது, 'ஸ்மரணம்' என்னும் பக்தி வழிபாடாகும்.  4. பாதசேவை:- எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் குறையாத பக்தியோடு இறைவனின் பாதங்களுக்குச் செய்யும் சேவையே, 'பாதசேவை' என்னும் பக்தி முறை. இந்த மகத்தான இறை வழிபாட்டை முறையாக, எப்போதும் செய்யும் பெரும் பேறுப் பெற்றவர் லட்சுமிதேவி. இவர் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து, அவரின் பாதங்களை பிடித்துவிடும் பணியில் எப்போதும் ஈடுபட்டிருப்பவர். 5. அர்ச்சனை:- மனதில் எந்த களங்கமும் இல்லாமல், மலர்களைக் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் பூஜையே 'அர்ச்சனை' என்னும் பக்தி முறை. இறைவனுக்கு அர்ச்சனை செய்து அதன் வாயிலாக பெரும் பேறுபெற்றவர்களில், துருவன் வம்சத்தில் வந்த பிருது மகாராஜா முக்கியமானவர். அவரைப் போல அர்ச்சனை செய்தவர்கள் வேறுயாரும் இல்லை என்கிறது புராணங்கள்.  6. வந்தனம்:- எட்டு அங்கங்களும் நன்றாக நிலத்தில் படும்படி, இறைவனை வணங்குவது 'வந்தனம்' ஆகும். மகாவிஷ்ணு, கண்ணனாக அவதரித்திருந்த காலகட்டத்தில், கம்சனின் அரசவை அமைச்சராக இருந்தவர் அக்ரூரர். இவர் கண்ணனுக்கு சித்தப்பா முறை. கம்சனின் மறைவுக்குப் பின், கண்ணனின் ஆலோசகராக இருந்தவர். இவர் கண்ணனை வந்தனம் செய்து சிறப்பு பெற்றவர். 7. தாஸ்யம்:- இறைவனுக்கு பணியாளனாக இருந்து நேசத்துடன் தொண்டு செய்வது 'தாஸ்யம்' என்னும் பக்தி முறை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற ரீதியில் இறைவன் மீது பக்தி செலுத்தும் சிறப்பான வழிபாட்டு முறை இது. குறித்த வழிபாட்டில் அனுமனை விட சிறப்பானவர்கள் எவரும் இல்லை. அவர் ராமரின் தாசர் என்றே பெயர் பெற்றவர். 8. சக்யம்:- இறைவனை தன்னுடைய பக்தனாக நினைத்து அவருடன் நட்பு கொள்வது 'சக்யம்' என்னும் பக்தி முறை. தன்னுடன் இருப்பது இறைவன் என்று அறிந்திருந்தாலும், அவரைத் தன்னுடைய நண்பனாக பாவித்து, அனைத்து நல்லது கெட்டதுகளையும் பக்தி கொண்டு பாசம் காட்டும் ஒரு வழிபாட்டு முறை.9. ஆத்மநிவேதனம்:- தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் எந்தவித தயக்கமும் இன்றி, இறைவனுக்கு அர்ப்பணிப்பதே 'ஆத்மநிவேதனம்' என்னும் பக்தி முைற. இதனை 'சரணாகதி' வழிபாடு என்றும் கூட சொல்லலாம். வாமனனாக தன் முன் நின்றிருந்த இறைவனுக்கு, தன்னிடம் இருந்த அனைத்தையும். தன்னையும் சேர்த்து அளித்து அழியாப் புகழ் பெற்ற மகாபலி சக்கரவர்த்தியை. இந்த பக்திக்கு உதாரணமாக்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement