அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள பிபார்ஜோய் சூறாவளி மேலும் வலுவடைந்துள்ளதாகவும், இந்த சூறாவளி வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.