திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த பிறிமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 95 நிமிட முழுநீள திரைப்படமான 'அனல்' எதிர்வரும் 08ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள மகாவலி கேந்தர அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது.
போதைவஸ்து மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான விழிப்புணர்வு திரைப்படமான 'அனல்' இயக்குநர் பிறிமனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ளதோடு ஈழத்து கலைஞர்களின் நடிப்பில் நம் சமூகத்தின் மீட்சிக்கு வித்தாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.