யாழ்ப்பாணத்தில் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பட்டப்பகல் நேரத்தில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் 9.30 மணியளவில் புலோலி மந்திகைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோட்டத்தில் புகையிலை நாற்றுக்களை நாட்டிக் கொண்டிருந்த போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.