• Sep 29 2024

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தி குத்து! samugammedia

Chithra / Sep 18th 2023, 3:06 pm
image

Advertisement

நீதவான் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி பொன்சேகா வீதியில், அளுத்கடை இலக்கம் 06 இல் அமைந்துள்ள குறித்த நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கழற்றும் சத்தம் கேட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் தப்பியோட முயற்சித்த போது, அதிலொருவரே கத்தியால் பொலிஸ் கான்ஸ்டபிளை  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது கான்ஸ்டபிளின் வலது கை வெட்டப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தி குத்து samugammedia நீதவான் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.பம்பலப்பிட்டி பொன்சேகா வீதியில், அளுத்கடை இலக்கம் 06 இல் அமைந்துள்ள குறித்த நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கழற்றும் சத்தம் கேட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.அப்போது அவர்கள் தப்பியோட முயற்சித்த போது, அதிலொருவரே கத்தியால் பொலிஸ் கான்ஸ்டபிளை  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.இதன்போது கான்ஸ்டபிளின் வலது கை வெட்டப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement