• Apr 19 2024

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Dec 7th 2022, 10:05 am
image

Advertisement

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறித்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த முடிவினை எடுத்துள்ளது.

2 இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு கப்பல் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறித்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த முடிவினை எடுத்துள்ளது.2 இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு கப்பல் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement