• Mar 29 2024

12 இலட்சம் ரூபா செலவில் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா..! samugammedia

Sharmi / May 26th 2023, 11:27 am
image

Advertisement

இவ் வருடம் 2023 மூன்றாம் மாதம் இடம்பெற்ற கச்சதீவு திருவிழாவுக்கான செலவு விபரங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு இரு மாதங்கள் கடந்த நிலையில் பதில் வழங்கப்பட்டுள்ளது.


கச்சதீவு திருவிழாவிற்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் ஒரு மில்லியன் இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு ரூபா 10 இலட்சமும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு ரூபா 2  இலட்சமும் ஒதுக்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட நிதியின் யாழ். செலவு விபரங்கள் மாவட்ட செயலகத்தால்  விரிவாக தரப்படாத நிலையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் செலவு  விபரங்களை நெடுந்தீவு பிரதேச செயலகம் ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு தகவல் கோரிக்கையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாயில் உற்சவத்திற்கு தேவையான பொருட்கள், குடிநீர்த்தாங்கி மற்றும் தளபாட்ங்களை மாவட்ட சொலகம் மற்றும் ஊர்காவற்துறை வேலணை  பிரதேச செயலகங்களிலிருந்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றமை.

திருவிழா முடிவடைந்ததும் மீள உரிய இடங்களுக்கு சேர்ப்பதற்கான ஏரிபொருட்செலவு, கச்சதீவு திருவிழா தொடர்பான முன் ஏற்பாட்டு கலந்துரையாடல் செலவு உட்பட்ட நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியில் உணவுப்பொருட்கள். ககாதாரப்பொருட்கள், எரிபொருள், மின்பிறப்பாககி, சுத்திகரிப்பு பணியாளர் சம்பளம், படகுக்கட்டணம், நீர்ப்பம்பிச்செலவுகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும், 2023.02.25 தியன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கச்சதீவுத்திருவிழாவில் அதிகளவு இந்திய பக்தர்களும் கலந்து கொள்ளதனால் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் செலவினங்களில் சிலவற்றை மீளளிப்பு செய்வதாக இந்திய துணைந்தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

 கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட செலவு விபரங்களின் நிதிக்கோரிக்கை விபரம் யாழ் இந்திய துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  யாழ். மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை இடம்பெற்ற கச்சதீவு  திருவிழா தொடர்பில் உரிய  ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படும் தொடர்பில் திருவிழா முடிவுற்ற மறுநாள் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12 இலட்சம் ரூபா செலவில் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா. samugammedia இவ் வருடம் 2023 மூன்றாம் மாதம் இடம்பெற்ற கச்சதீவு திருவிழாவுக்கான செலவு விபரங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு இரு மாதங்கள் கடந்த நிலையில் பதில் வழங்கப்பட்டுள்ளது.கச்சதீவு திருவிழாவிற்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் ஒரு மில்லியன் இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிதியில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு ரூபா 10 இலட்சமும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு ரூபா 2  இலட்சமும் ஒதுக்கப்பட்டது.ஒதுக்கப்பட்ட நிதியின் யாழ். செலவு விபரங்கள் மாவட்ட செயலகத்தால்  விரிவாக தரப்படாத நிலையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் செலவு  விபரங்களை நெடுந்தீவு பிரதேச செயலகம் ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு தகவல் கோரிக்கையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாயில் உற்சவத்திற்கு தேவையான பொருட்கள், குடிநீர்த்தாங்கி மற்றும் தளபாட்ங்களை மாவட்ட சொலகம் மற்றும் ஊர்காவற்துறை வேலணை  பிரதேச செயலகங்களிலிருந்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றமை.திருவிழா முடிவடைந்ததும் மீள உரிய இடங்களுக்கு சேர்ப்பதற்கான ஏரிபொருட்செலவு, கச்சதீவு திருவிழா தொடர்பான முன் ஏற்பாட்டு கலந்துரையாடல் செலவு உட்பட்ட நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.குறித்த நிதியில் உணவுப்பொருட்கள். ககாதாரப்பொருட்கள், எரிபொருள், மின்பிறப்பாககி, சுத்திகரிப்பு பணியாளர் சம்பளம், படகுக்கட்டணம், நீர்ப்பம்பிச்செலவுகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023.02.25 தியன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கச்சதீவுத்திருவிழாவில் அதிகளவு இந்திய பக்தர்களும் கலந்து கொள்ளதனால் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் செலவினங்களில் சிலவற்றை மீளளிப்பு செய்வதாக இந்திய துணைந்தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட செலவு விபரங்களின் நிதிக்கோரிக்கை விபரம் யாழ் இந்திய துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  யாழ். மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை இடம்பெற்ற கச்சதீவு  திருவிழா தொடர்பில் உரிய  ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படும் தொடர்பில் திருவிழா முடிவுற்ற மறுநாள் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement