களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் 21 ஆம் வார்டில் ஐந்து நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.
பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாயார், குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், திடீரென சுகயீனமடைந்துள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும், நேற்று புதன்கிழமை (18) இரவு குழந்தை உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்த குழந்தையின் தாய்க்கு திருமணமாகி ஆறு வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை இதுவாகும்.
இச் சம்பவம் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இக் குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணமாகி ஆறு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை ஐந்து நாட்களில் உயிரிழந்த சோகம். samugammedia களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் 21 ஆம் வார்டில் ஐந்து நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாயார், குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், திடீரென சுகயீனமடைந்துள்ளது. இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், நேற்று புதன்கிழமை (18) இரவு குழந்தை உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இறந்த குழந்தையின் தாய்க்கு திருமணமாகி ஆறு வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை இதுவாகும். இச் சம்பவம் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இக் குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.