• Apr 25 2024

மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனை நாளை மறுதினம் திறந்து வைப்பு ! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 8:54 pm
image

Advertisement

மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனை நாளை மறுதினம் 24.03.2023 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை எதிர்காலத்தில் சைவத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழவுள்ளது.



காலத்தால் அழியாதவாறு கருங்கற்களில் #மூவாயிரம் திருமந்திர பாடல்களையும் பாரதிபுரத்தைச் சேர்ந்த #வினோத் என்ற கலைஞர் (புகழுடற் சின்னங்களில் தம் கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவரை ) கொண்டு கைகளால் செதுக்கி அதனை அமைக்கப்பட்டு வருகின்ற சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதித்து செயற்கரிய சைவப்பணியை கிழக்கிலங்கையிலும் (மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்) செயற்படுத்திக் கொண்டிருக்கிறார் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனார்.



வட புலத்தில் நாவற்குழியில் திருவாசக அரண்மனை அமைந்தமை போன்று எதிர்காலத்தில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் திருமந்திர அரண்மனை அமையவுள்ளமை சிறப்பிற்குரியது.



இத்தகு சிறப்பிற்குரிய மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனை நாளை மறுதினம் 24.03.2023 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளமை சிறப்பாகும். 


மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனை நாளை மறுதினம் திறந்து வைப்பு SamugamMedia மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனை நாளை மறுதினம் 24.03.2023 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை எதிர்காலத்தில் சைவத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழவுள்ளது.காலத்தால் அழியாதவாறு கருங்கற்களில் #மூவாயிரம் திருமந்திர பாடல்களையும் பாரதிபுரத்தைச் சேர்ந்த #வினோத் என்ற கலைஞர் (புகழுடற் சின்னங்களில் தம் கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவரை ) கொண்டு கைகளால் செதுக்கி அதனை அமைக்கப்பட்டு வருகின்ற சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதித்து செயற்கரிய சைவப்பணியை கிழக்கிலங்கையிலும் (மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்) செயற்படுத்திக் கொண்டிருக்கிறார் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனார்.வட புலத்தில் நாவற்குழியில் திருவாசக அரண்மனை அமைந்தமை போன்று எதிர்காலத்தில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் திருமந்திர அரண்மனை அமையவுள்ளமை சிறப்பிற்குரியது.இத்தகு சிறப்பிற்குரிய மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனை நாளை மறுதினம் 24.03.2023 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளமை சிறப்பாகும். 

Advertisement

Advertisement

Advertisement