தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட முதற் போட்டியாளர் தான் லாஸ்லியா.
இலங்கையில் பிரபல ஊடகமொன்றில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உலக நாடுகளில் உள்ள லட்சக்கணக்கானோரை தனது புன்னகை மற்றும் அழகில் கட்டிப் போட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு பல்வேறுபட்ட திரையுலக வாய்ப்புக்களும் வரத்தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் நடித்திருந்நதார்.
அதேவேளை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் லாஸ்லியா இடையிடையே பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றி வருகின்றார்.
இவ்வாறான நிலையில் அண்மையில் அவர் துபாய் சென்றிருக்கிறார். அங்கு தங்கியிருக்கும் லாஸ்லியா கறுப்பு நிற உடையணிந்து போட்டோசூட் நடத்தி அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.