பேலியகொடை பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குறித்த கார் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட மற்றைய இருவரும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.
24 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காரில் தப்பிச் செல்லும் போது கைது செய்ய முயற்சிக்காத காரணத்தினாலேயே இவர்கள் மூவரும் பணி இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.