சங்கானை மாவடி ஞான வைரவர் தேவஸ்தான கும்பாபிஷேக தின மணவாளக்கோலமும் அஷ்டோத்திர சத (108) சங்காபிஷேக நிகழ்வு நேற்றையதினம்(25) சிறப்பாக இடம்பெற்றது.
காலை நிகழ்வாக அஷ்டோத்திர சத (108) சங்காபிஷேக நிகழ்வும் மாலை வசந்தமண்டப பூஜையுடன் வைரவப் பெருமான் உள் வீதி வலம் வந்ததுடன் பூந்தண்டிகையில் எழுந்தருளி வெளிவீதியுலா வருகை தந்தார். அதேவேளை விசேட தவில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.