புது குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு நாச்சிகுடா பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளினால் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் 18.02.2023 அன்றைய தினம் அதிகாலை மக்கள் குடியிருப்புகள் புகுந்த நான்கு காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட தென்னை பயிற்செய்கைகளை அழித்துள்ளதுடன் தற்பொழுது பொரும்போகபயிர்செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் நற்பொழுது இரவுவேலைகளிலே அதிகமாக விவசாயிகள் அறுவடைக்காக செல்லவேண்டியநிலை ஏற்ப்பட்டுள்ளதுடன் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புபகுதிக்குள் வருவதன் காரணமாக அச்சநிலை தொற்றியுள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஒர் நிரந்தர தீர்வினை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இப்பகுதியில் வாழும் மக்களின் விருப்பமும் அவாவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தென்னை பயிற் செய்கை காட்டுயானைகளினால் அழிப்பு SamugamMedia புது குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு நாச்சிகுடா பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளினால் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் 18.02.2023 அன்றைய தினம் அதிகாலை மக்கள் குடியிருப்புகள் புகுந்த நான்கு காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட தென்னை பயிற்செய்கைகளை அழித்துள்ளதுடன் தற்பொழுது பொரும்போகபயிர்செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் நற்பொழுது இரவுவேலைகளிலே அதிகமாக விவசாயிகள் அறுவடைக்காக செல்லவேண்டியநிலை ஏற்ப்பட்டுள்ளதுடன் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புபகுதிக்குள் வருவதன் காரணமாக அச்சநிலை தொற்றியுள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஒர் நிரந்தர தீர்வினை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இப்பகுதியில் வாழும் மக்களின் விருப்பமும் அவாவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.