• Sep 29 2024

ரயில் நிலையத்தில் மோதல்: நிலைய அதிபர், ஊழியர் உட்பட மூவர் வைத்தியசாலையில்..! தந்தை, மகன் கைது! samugammedia

Chithra / Oct 2nd 2023, 4:15 pm
image

Advertisement


பாணந்துறை ரயில்  நிலையத்தில் ரயில்வே  ஊழியர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில்  இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக ரயில்  நிலைய அதிபர்,  ஊழியர் ஒருவர் மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்  சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மகன் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை சாகர மாவத்தையில் வசிக்கும் 50 வயதுடைய ஒருவரும் 23 வயதான அவரது மகனுமே  இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் பயண சீட்டு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்   அடிப்படையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ரயில் நிலையத்தில் மோதல்: நிலைய அதிபர், ஊழியர் உட்பட மூவர் வைத்தியசாலையில். தந்தை, மகன் கைது samugammedia பாணந்துறை ரயில்  நிலையத்தில் ரயில்வே  ஊழியர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில்  இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக ரயில்  நிலைய அதிபர்,  ஊழியர் ஒருவர் மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தச்  சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மகன் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பாணந்துறை சாகர மாவத்தையில் வசிக்கும் 50 வயதுடைய ஒருவரும் 23 வயதான அவரது மகனுமே  இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரயில் பயண சீட்டு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்   அடிப்படையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Advertisement

Advertisement

Advertisement