கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியில் 49 சதவீத பங்குகள் மாத்திரமே இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருக்குமென ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச துறைமுக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
51 சதவீத பங்குகள் இலங்கை அரசாங்கதிடம் இருக்குமெனவும் அதனால் ஊழியர்கள் அச்சமடைய வேண்டிய தேவையில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் துறைமுக ஊழியர் சங்கம் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
இன்று புதன்கிழமை ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சு நடத்தியபோதே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறினார். இந்தியா, ஜ்ப்பான் ஆகிய நாடுகள் இலங்கையுடன் இணைந்து கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் 2018 ஆம் கைச்சாத்திடப்பட்டிருந்து.
அபிவிருத்திச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் கடந்த மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்துத் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து சென்றிருந்த நிலையில் துறைமுக ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தன.
பிற செய்திகள்:
- செல்போனில் பேசியபடி சென்ற தமிழ் பெண்.. நொடியில் ‘கிரில் சிக்கன்’ மெஷினால் நடந்த அதிர்ச்சி.. பரபரக்க வைத்த சம்பவம்..!
- சிங்க வேடமிட்டுள்ள நரிகளுக்கு சிங்கள மக்கள் ஏமாற மாட்டார்கள் – பியல் நிஷாந்த
- விமானநிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
- பக்தர்களை வரவேற்று ஆசி வழங்கும் நாய்! வைரலாகும் காணொளி
- முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!
- இலங்கையில் புதிய வகை கொரோனா; மக்களே எச்சரிக்கை!
- காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!
- ‘காதலிக்க ஒரு துணை தேவை’ சூட்சுமமான விளம்பரம் மூலம் விபசாரம்-9 பேர் கைது!
- இலங்கை வரும் பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விசேட அறிவிப்பு!
- யாழில் கடும் மழை காரணமாக 1047 பேர் பாதிப்பு!
- விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான கருப்பு பெட்டி சிக்கியது, விமானத்தின் விமானி குறித்த பரபரப்பு தகவல்கள்!
- அந்த வீடியோ பக்கா ஸ்கிரிப்ட்’… ‘என்ன என்னெல்லாம் பேச சொன்னாங்க தெரியுமா’… உண்மையை போட்டுடைத்த வைரல் பெண்!
- தடுப்பை உடைத்து வெளியே பாய்ந்த ரயிலை தாங்கிப் பிடித்த திமிங்கிலம்; தற்போது வெளியான தகவல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்