கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்ட நதாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் நேற்று (27) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.