• Mar 29 2024

அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா!

crownson / Dec 10th 2022, 9:44 am
image

Advertisement

கட்டாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதில், அல்-ரயான் நகரில் உள்ள எஜுகேஷன் சிட்டி (Education City) மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதியில் பிரேசில் - குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் ஆடியதால், 90 நிமிடங்கள் பிரதான நேர முடிவில் கோல் ஏதும் இன்றி சமநிலை எட்டப்பட்டது.

இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், 106-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர், வியத்தகு வகையில் கோல் அடித்து மிரட்டினார்.

அதுவரை அமைதியாக இருந்த மைதானம், ரசிகர்களின் உற்சாக குரலால் அதிர்ந்தது. இதையடுத்து, வெற்றிபெற்றதாகவே எண்ணி பிரேசில் வீரர்கள் மெத்தனமாக ஆடினர்.

இதை சாதகமாக பயன்படுத்திய குரோஷிய அணி, 3 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பதில் கோல் அடித்து அசத்தியது.

கூடுதல் நேரமும் 1-1 என சமனில் முடிந்ததால், வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதற்காக, இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில், முதல் வாய்ப்பில் குரோஷியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், பிரேசில் சார்பில் ரோட்ரிகோ அடித்த பந்தை, குரோஷிய கோல்கீப்பர் லிவோகோவிச் (Livokovic) அற்புதமாக தடுத்து, தனது அணியை காப்பாற்றினார்.

மேலும், தொடர்ந்து 4 வாய்ப்புகளையும் குரோஷிய வீரர்கள் கோலாக மாற்றி வியக்க வைத்தனர்.அதேவேளையில், 4 வாய்ப்புகளில் இரண்டை பிரேசில் வீரர்கள் வீணடித்தனர்.

இதனால், ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணி அபார வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

2018 உலகக் கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த குரோஷிய அணி, அந்த தொடரில் நாக்-அவுட் மற்றும் காலிறுதியில் எதிரணிகளை ஷூட்-அவுட் முறையிலேயே வீழ்த்தியது.

நடப்புத் தொடரில் நாக்-அவுட்டில் ஜப்பானையும், காலிறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியையும் ஷூட்-அவுட் முறையில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

நேற்றைய தினம் நடந்த இன்னும் ஒரு போட்டியில் அர்ஜென்டினா அணி, ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இதில், தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 35 மற்றும் 73-வது நிமிடங்களில் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

இந்த இரு கோல்களுக்கும் நட்சத்திர வீரர் மெஸ்ஸியே காரணமாக இருந்தார். முதல் கோலுக்கு அபராமான அசிஸ்ட் செய்த மெஸ்ஸி, இரண்டாவது கோலை பெனால்டி வாய்ப்பில் அவரே அடித்தார்.

இதையடுத்து, நெதர்லாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினர். குறிப்பாக, 78-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியில் மாற்று வீரராக களம் கண்ட வெகோர்ஸ்ட், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

இவர், 83 மற்றும் பிரதான நேரத்தில் கடைசி நிமிடத்தில் கோல்கள் அடித்து மிரட்டினார். 90 நிமிடங்கள் பிரதான நேர முடிவில், 2-2 என ஆட்டம் சமநிலையை எட்டியதால், வெற்றியை தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

ஆனால், அதில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால், பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் அரண் போல் செயல்பட்டு, நெதர்லாந்து வீரர்களின் முதல் இரு முயற்சிகளை முறியடித்தார்.

விறுவிறுப்பின் உச்சம் தொட்ட இந்தப் போட்டியில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-3 என்ற கோல்கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது.

வழக்கம் போலவே இந்த போட்டியிலும் மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா கட்டாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், அல்-ரயான் நகரில் உள்ள எஜுகேஷன் சிட்டி (Education City) மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதியில் பிரேசில் - குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் ஆடியதால், 90 நிமிடங்கள் பிரதான நேர முடிவில் கோல் ஏதும் இன்றி சமநிலை எட்டப்பட்டது.இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், 106-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர், வியத்தகு வகையில் கோல் அடித்து மிரட்டினார். அதுவரை அமைதியாக இருந்த மைதானம், ரசிகர்களின் உற்சாக குரலால் அதிர்ந்தது. இதையடுத்து, வெற்றிபெற்றதாகவே எண்ணி பிரேசில் வீரர்கள் மெத்தனமாக ஆடினர். இதை சாதகமாக பயன்படுத்திய குரோஷிய அணி, 3 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பதில் கோல் அடித்து அசத்தியது.கூடுதல் நேரமும் 1-1 என சமனில் முடிந்ததால், வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக, இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன.இதில், முதல் வாய்ப்பில் குரோஷியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், பிரேசில் சார்பில் ரோட்ரிகோ அடித்த பந்தை, குரோஷிய கோல்கீப்பர் லிவோகோவிச் (Livokovic) அற்புதமாக தடுத்து, தனது அணியை காப்பாற்றினார்.மேலும், தொடர்ந்து 4 வாய்ப்புகளையும் குரோஷிய வீரர்கள் கோலாக மாற்றி வியக்க வைத்தனர்.அதேவேளையில், 4 வாய்ப்புகளில் இரண்டை பிரேசில் வீரர்கள் வீணடித்தனர். இதனால், ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணி அபார வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.2018 உலகக் கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த குரோஷிய அணி, அந்த தொடரில் நாக்-அவுட் மற்றும் காலிறுதியில் எதிரணிகளை ஷூட்-அவுட் முறையிலேயே வீழ்த்தியது. நடப்புத் தொடரில் நாக்-அவுட்டில் ஜப்பானையும், காலிறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியையும் ஷூட்-அவுட் முறையில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.நேற்றைய தினம் நடந்த இன்னும் ஒரு போட்டியில் அர்ஜென்டினா அணி, ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 35 மற்றும் 73-வது நிமிடங்களில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த இரு கோல்களுக்கும் நட்சத்திர வீரர் மெஸ்ஸியே காரணமாக இருந்தார். முதல் கோலுக்கு அபராமான அசிஸ்ட் செய்த மெஸ்ஸி, இரண்டாவது கோலை பெனால்டி வாய்ப்பில் அவரே அடித்தார்.இதையடுத்து, நெதர்லாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினர். குறிப்பாக, 78-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியில் மாற்று வீரராக களம் கண்ட வெகோர்ஸ்ட், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இவர், 83 மற்றும் பிரதான நேரத்தில் கடைசி நிமிடத்தில் கோல்கள் அடித்து மிரட்டினார். 90 நிமிடங்கள் பிரதான நேர முடிவில், 2-2 என ஆட்டம் சமநிலையை எட்டியதால், வெற்றியை தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால், அதில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால், பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் அரண் போல் செயல்பட்டு, நெதர்லாந்து வீரர்களின் முதல் இரு முயற்சிகளை முறியடித்தார். விறுவிறுப்பின் உச்சம் தொட்ட இந்தப் போட்டியில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-3 என்ற கோல்கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது. வழக்கம் போலவே இந்த போட்டியிலும் மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement