சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னர் பெற்றுக்கொண்ட பி.சி.ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை, ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயமாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்திருந்த நிலையில் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உதயங்க வீரதுங்க, உக்ரைன் - ரஷ்ய யுத்தம் காரணமாக, ரஷ்யாவுக்கு, உலகின் பல நாடுகள் பயணத் தடை விதித்துள்ள சூழ்நிலையில், ஏரோ ப்ளோட் நிறுவனம் கடந்த ஒக்டோபர் இலங்கைக்கு பயணத்தை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சூழ்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் தொடர்பில். தாம் கவலைகொண்டுள்ளதாக தெரிவித்த அவர், துருக்கி, எகிப்து, மாலைத்தீவு மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள். சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கோரிக்கை சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னர் பெற்றுக்கொண்ட பி.சி.ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை, ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயமாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்திருந்த நிலையில் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உதயங்க வீரதுங்க, உக்ரைன் - ரஷ்ய யுத்தம் காரணமாக, ரஷ்யாவுக்கு, உலகின் பல நாடுகள் பயணத் தடை விதித்துள்ள சூழ்நிலையில், ஏரோ ப்ளோட் நிறுவனம் கடந்த ஒக்டோபர் இலங்கைக்கு பயணத்தை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டினார். இவ்வாறான சூழ்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் தொடர்பில். தாம் கவலைகொண்டுள்ளதாக தெரிவித்த அவர், துருக்கி, எகிப்து, மாலைத்தீவு மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள். சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டார்.