• Sep 29 2024

வரி செலுத்தாத நபர்களை அடையாளம் காணுமாறு திணைக்கள ஆணையாளருக்கு பணிப்புரை.! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 5:31 pm
image

Advertisement

வருமான வரி செலுத்த தவறுகின்ற நபர்களை அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.


நிதியமைச்சு வளாகத்தில் இன்று இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.


நாடு அரசாங்க வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தும் இந்த வேளையில், வரிகளை விதித்து வருமானம் ஈட்டுவது மற்றும் அவ்வாறு வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


வரி வசூல், வெற்றிடங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.



வரி செலுத்தாத நபர்களை அடையாளம் காணுமாறு திணைக்கள ஆணையாளருக்கு பணிப்புரை. SamugamMedia வருமான வரி செலுத்த தவறுகின்ற நபர்களை அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.நிதியமைச்சு வளாகத்தில் இன்று இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.நாடு அரசாங்க வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தும் இந்த வேளையில், வரிகளை விதித்து வருமானம் ஈட்டுவது மற்றும் அவ்வாறு வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.வரி வசூல், வெற்றிடங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement