• Apr 24 2024

இனிமேலும் விலக்கு பெறக்கூடாது! பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் பாய வேண்டும்..! - மனோ எம்பி samugammedia

Chithra / May 29th 2023, 5:46 pm
image

Advertisement

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்தின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு, நீதி துறை தன் கடமையை செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களுக்கு எதிராக பேசி வரும் பெளத்த பிக்குகளுக்கு நோக்கியும் இதே சட்டம், ஒழுங்கு, நீதி துறை பாய வேண்டும்.

எந்தவொரு மத தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்கு பெற கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

போதகர் ஜெரோம்,  பேச்சாளர் நடதஷா ஆகியோரை சுற்றி வளைத்திருக்கும் பொலிஸ், நீதிமன்ற சட்டங்கள், இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பேசி வரும் பெளத்த பிக்குமார்களுக்கு எதிராகவும் பயன்பட வேண்டும். இனிமேல் இந்நாட்டில், சட்டம் ஒருபக்க சார்பாக இருக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்த தனது ட்விட்டர் பதிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேமச தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் ட்விட்டர் தளங்களுக்கும், மனோ கணேசன் எம்பி இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனிமேலும் விலக்கு பெறக்கூடாது பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் பாய வேண்டும். - மனோ எம்பி samugammedia போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்தின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு, நீதி துறை தன் கடமையை செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.அதேவேளை இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களுக்கு எதிராக பேசி வரும் பெளத்த பிக்குகளுக்கு நோக்கியும் இதே சட்டம், ஒழுங்கு, நீதி துறை பாய வேண்டும்.எந்தவொரு மத தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்கு பெற கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, போதகர் ஜெரோம்,  பேச்சாளர் நடதஷா ஆகியோரை சுற்றி வளைத்திருக்கும் பொலிஸ், நீதிமன்ற சட்டங்கள், இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பேசி வரும் பெளத்த பிக்குமார்களுக்கு எதிராகவும் பயன்பட வேண்டும். இனிமேல் இந்நாட்டில், சட்டம் ஒருபக்க சார்பாக இருக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் இது குறித்த தனது ட்விட்டர் பதிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேமச தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் ட்விட்டர் தளங்களுக்கும், மனோ கணேசன் எம்பி இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement