தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலானது இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உணர்வூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் பிரத்தியேக இடத்தில் திலீபனின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி பல்கலை மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் . நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தியாக தீபத்தின் நினைவாக மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.