• Apr 23 2024

தன்னுயிரை மாய்த்து மகன் உயிரை காத்த தந்தை - நெகிழ வைக்கும் சம்பவம்! samugammedia

Chithra / Mar 28th 2023, 6:02 pm
image

Advertisement

தனது மகனது உயிரை காப்பாற்றும் நோக்குடன் ஆற்றில் குதித்த தந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இச்சம்பவம் மலேசியாவின் புத்தாதான் நகரில் உள்ள கம்போங் இம்பாஹான் பகுதியிலே இடம்பெற்றுள்ளது. 

லாசிபி லவாடிஹு என்ற 40 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மீன் பிடிப்பதற்காக அவரும் அவரது மகனும் ஆற்றிற்கு சென்றிருந்த நிலையில் அவரது கார் உருண்டு ஆற்றில் விழுந்துள்ளது. 

இதனால் பதறிப்போன தந்தை லாசிபி லவாடிஹு மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்து மகனை மீட்ட வேளை அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் சிறுவனைப் பத்திரமாக அவரிடமிருந்து வாங்கிக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார். 

ஆனால் தந்தை லாசிபி நீருக்குள் மூழ்கியமையால் தேடல், மீட்புப் பணி ஊழியர்கள் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் லாசிபி லவாடிஹுவின் உடலை ஆற்றிலிருந்து மீட்டெடுத்துள்ளனர். 

இவ்வாறாக மகனை காப்பாற்றிய பின்னர் தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுயிரை மாய்த்து மகன் உயிரை காத்த தந்தை - நெகிழ வைக்கும் சம்பவம் samugammedia தனது மகனது உயிரை காப்பாற்றும் நோக்குடன் ஆற்றில் குதித்த தந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் மலேசியாவின் புத்தாதான் நகரில் உள்ள கம்போங் இம்பாஹான் பகுதியிலே இடம்பெற்றுள்ளது. லாசிபி லவாடிஹு என்ற 40 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மீன் பிடிப்பதற்காக அவரும் அவரது மகனும் ஆற்றிற்கு சென்றிருந்த நிலையில் அவரது கார் உருண்டு ஆற்றில் விழுந்துள்ளது. இதனால் பதறிப்போன தந்தை லாசிபி லவாடிஹு மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்து மகனை மீட்ட வேளை அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் சிறுவனைப் பத்திரமாக அவரிடமிருந்து வாங்கிக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார். ஆனால் தந்தை லாசிபி நீருக்குள் மூழ்கியமையால் தேடல், மீட்புப் பணி ஊழியர்கள் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் லாசிபி லவாடிஹுவின் உடலை ஆற்றிலிருந்து மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறாக மகனை காப்பாற்றிய பின்னர் தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement