நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த 'ஒளி விழா' நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை 10:30 மணி அளவில் பாடசாலை மண்டபத்தில் நடைப்பெற்றது.
பாடசாலை அதிபர் எம.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அருட் சகோதரர் டெஸ்மண்ட் குரூஸ் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அத்துடன் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.