மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த 'சீதா' எனும் யானை மீது இன்று அதிகாலை வனவிலங்கு அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
காட்டு யானை என நினைத்து வன விலங்கு அதிகாரி சீதாவை சுட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.