இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் கடுமையான மழை பெய்து வருகின்றது.
இதனால் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதை காணமுடிகின்றது.
வீட்டுக் காணிகளிலும் மழை நீர் உட்புகுந்துள்ளது.பல வீதிகளில் வெள்ளநீர் செல்வதால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதையும் அவதானிக்க முடிகின்றது.