கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் 22 கிலோ கிராம் தங்கம் வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து வந்தபோதே குறித்த நான்கு பேர் கொண்ட குழுவினர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது பயண பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ தங்கத்தின் பெறுமதி 400 மில்லியன் ரூபாய் ஆகும் என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவர்களிடம் தங்க நகைகள், திரவம்,பவுடர் மற்றும் 30 ஆடைகளில் தங்கம் பூசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேக நபர்கள் துபாயில் இருந்து சென்னைக்கு பயணித்து பின்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
விமான நிலையத்தில் ஒரு தொகை தங்கத்துடன் நான்கு பேர் கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் 22 கிலோ கிராம் தங்கம் வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து வந்தபோதே குறித்த நான்கு பேர் கொண்ட குழுவினர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பயண பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ தங்கத்தின் பெறுமதி 400 மில்லியன் ரூபாய் ஆகும் என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் இவர்களிடம் தங்க நகைகள், திரவம்,பவுடர் மற்றும் 30 ஆடைகளில் தங்கம் பூசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட சந்தேக நபர்கள் துபாயில் இருந்து சென்னைக்கு பயணித்து பின்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.