புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்காக வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புடன் நிதியமொன்றை நிறுவுவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்து பொருட்களை வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் விசேட கணக்கிற்கு 500 மில்லியன் ரூபாவை வழங்குவதே இலக்கு என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதில் 100 மில்லியன் ரூபா தற்போது வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பினூடாகவும், 400 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைக்கு தொடர்பான அனைத்து தரப்பினரின் பங்களிப்பிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.