தென் மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து கப்பம் பெறுதல் போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட பொலிஸ் குழுவில் பெந்தோட்டை தொடக்கம் கதிர்காமம் பொலிஸ் நிலையங்கள் வரை 600 பொலிஸ் அதிகாரிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் மாகாணத்தில் உள்ள கடற்கரையை பயன்படுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் சிலர் கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்தே இந்த விசேட பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.