2023ஆம் ஆண்டு முதல் கடவுச்சீட்டு ஆன்லைனில் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் (தகவல் தொழில்நுட்பம்) ஆர்.ஜி.சி.பி.டி. திரு.ராமவிக்கிரம தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்படும்
கைரேகைகளைப் பெறுவதற்காக 50 வட்டார அலுவலகங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதான குடிவரவு அலுவலகங்களில் நிலவும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.