• Sep 30 2024

யாழ். குடத்தனை பகுதி கடற்கரையில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு..! samugammedia

Chithra / Jul 23rd 2023, 3:01 pm
image

Advertisement

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது.

குடத்தனை வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட எண்ணெய் பரல் ஒன்றில் இருந்து குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி கடற்கரையில் ஆயுதங்கள் புதைத்திருப்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலடையடுத்து பருத்திதுறை பொலிசாரால் மேற்படி பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ரி- 56 ரக துப்பாக்கி இரண்டு அதற்கான மகசின் எட்டு அதற்கான தோட்டாக்கள் அடங்கிய பெட்டி ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருட்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.


யாழ். குடத்தனை பகுதி கடற்கரையில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு. samugammedia யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது.குடத்தனை வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட எண்ணெய் பரல் ஒன்றில் இருந்து குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.மேற்படி கடற்கரையில் ஆயுதங்கள் புதைத்திருப்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலடையடுத்து பருத்திதுறை பொலிசாரால் மேற்படி பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது ரி- 56 ரக துப்பாக்கி இரண்டு அதற்கான மகசின் எட்டு அதற்கான தோட்டாக்கள் அடங்கிய பெட்டி ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளது.குறித்த வெடிபொருட்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement