க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு விடையளிப்பதற்கு உதவி செய்ததாக ஆசிரியர் ஒருவர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்திலுள்ள பாடசாலை ஒன்றில் பரீட்சை நிலையத்தில் கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தினை வடமத்திய உதவி மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியர் அந்த பிரதேசத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துவதாகவும், தனது வகுப்பிற்கு வருகை தரும் மாணவர்களிற்கே விடையளிப்பதற்கு உதவினார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.