இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட் கால்நடை பண்ணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றும் நாளையும் மேல், தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுவதாக மில்கோ அறிவித்துள்ளது.
இதனால், கால்நடை வளர்ப்போர், கால்நடைகளை காப்பகங்களுக்குள் வைத்து, போதுமான அளவு தண்ணீர் வழங்குவதன் மூலம் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மில்கோ கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை – மில்கோ விடுத்துள்ள கோரிக்கை samugammedia இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட் கால்நடை பண்ணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இன்றும் நாளையும் மேல், தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுவதாக மில்கோ அறிவித்துள்ளது.இதனால், கால்நடை வளர்ப்போர், கால்நடைகளை காப்பகங்களுக்குள் வைத்து, போதுமான அளவு தண்ணீர் வழங்குவதன் மூலம் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மில்கோ கேட்டுக் கொண்டுள்ளது.