பியூட்டி பார்லருக்கு செல்ல கூடாதென கணவன் மறுத்தமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஸ்கீம் எண் 51 பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியினை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே விரக்தியடைந்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக அவரது கணவர் தனது மனைவி பியூட்டி பார்லருக்குச் செல்வதை தான் தடுத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து கோணங்களிலும் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
'பியூட்டி பார்லர்' செல்ல தடை போட்ட கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு. samugammedia பியூட்டி பார்லருக்கு செல்ல கூடாதென கணவன் மறுத்தமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஸ்கீம் எண் 51 பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியினை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே விரக்தியடைந்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக அவரது கணவர் தனது மனைவி பியூட்டி பார்லருக்குச் செல்வதை தான் தடுத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிசாரிடம் கூறியுள்ளார். மேலும், உயிரிழந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து கோணங்களிலும் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.