பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலியை விடுதலை செய்யுமாறு கோரி 12,000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணங்கள் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டிருந்தன.
'நானும் போராட்டத்தில் ஒருவன்' என்பதே இதன் கருப்பொருளாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வசந்த முதலிகே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது ஏன்? என சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
'நானும் போராட்டத்தில் ஒருவன்' – 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துக்களுடன் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலியை விடுதலை செய்யுமாறு கோரி 12,000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணங்கள் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டிருந்தன.'நானும் போராட்டத்தில் ஒருவன்' என்பதே இதன் கருப்பொருளாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வசந்த முதலிகே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது ஏன் என சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.