இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் சிறுவர் இலக்கிய துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான இலவச ஒரு நாள் கருத்தமர்வு நடைபெறவுள்ளது.
மேற்படி கருத்தமர்வானது எதிர்வரும் 29/01/2023 ஆம் திகதி மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 2.00 மணி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது.
ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் தங்களது பெயர், தொலைபேசி இலக்க விபரங்களை கடமை நேரத்தில் 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் என வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை தெரிவித்துள்ளார்.