எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (08) நடைபெறவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வியாழன் அன்று விவாதிக்கப்படவுள்ள மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, தற்போது விவாதத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.