அமெரிக்காவில் பெண்ணை கொன்று அவரது இதயத்தை வெட்டியதோடு, 4 வயது குழந்தை உட்பட இருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓகலஹோமா மாகாணத்தில், ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி, தனது சொந்த குடும்பத்திற்கே சமைத்து கொடுத்து சாப்பிடுமாறு அவர்களை வற்புறுத்தியிருக்கிறார்.
44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்ற நபர் போதைப் பொருள் கடத்தியதற்காக சில வருடங்கள் முன்பு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.கடந்த 2021 ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த ஆண்டர்சன், ஒரு வாரத்திற்கு பின்பு ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப்பின் என்ற பெண்ணை கொலை செய்து அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார்.
பெண்ணின்
பின்னர் அவரது மாமா வீட்டிற்கு சென்று உருளைக்கிழங்குடன், இதயத்தை சமைத்து அதனை மாமா மற்றும் அத்தையை சாப்பிட சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இறுதியில் தம்பதியினரையும், அவர்களது 4 வயது பேத்தியையும் கொலை செய்துள்ளார்.
ஆண்டர்சன் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்ட பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இத்தாக்குதலில் காயமடைந்த ஆண்டர்சனின் அத்தை மற்றும் இறந்த பெண்ணின் குடும்பத்தினர் ஓக்லஹோமா ஆளுநர் மற்றும் சிறை பரோல் வாரியத்திற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
ஓக்லஹோமாவின் ஆளுநர் கெவின் ஸ்டிட் ஆண்டர்சனை விடுதலை செய்த ஒப்புதல் செய்த போது, அவர் 20 ஆண்டு சிறைத்தண்டனையை வெறும் மூன்றாண்டுகள் மட்டுமே அனுபவித்திருந்தார்.
அமெரிக்க அரசு சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க சிறிய குற்றங்களை செய்தவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அந்த பட்டியலில் தவறுதலாக ஆண்டர்சன் பெயரும் இடம்பெற்றுள்ளது.இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என தற்போது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
உருளைகிழங்குடன் இதயத்தை சமைத்த கொலைகாரன். உறவினர்களையே குத்திக்கொன்ற கொடூரம் SamugamMedia அமெரிக்காவில் பெண்ணை கொன்று அவரது இதயத்தை வெட்டியதோடு, 4 வயது குழந்தை உட்பட இருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஓகலஹோமா மாகாணத்தில், ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி, தனது சொந்த குடும்பத்திற்கே சமைத்து கொடுத்து சாப்பிடுமாறு அவர்களை வற்புறுத்தியிருக்கிறார்.44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்ற நபர் போதைப் பொருள் கடத்தியதற்காக சில வருடங்கள் முன்பு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.கடந்த 2021 ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த ஆண்டர்சன், ஒரு வாரத்திற்கு பின்பு ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப்பின் என்ற பெண்ணை கொலை செய்து அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார்.பெண்ணின்பின்னர் அவரது மாமா வீட்டிற்கு சென்று உருளைக்கிழங்குடன், இதயத்தை சமைத்து அதனை மாமா மற்றும் அத்தையை சாப்பிட சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இறுதியில் தம்பதியினரையும், அவர்களது 4 வயது பேத்தியையும் கொலை செய்துள்ளார்.ஆண்டர்சன் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்ட பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இத்தாக்குதலில் காயமடைந்த ஆண்டர்சனின் அத்தை மற்றும் இறந்த பெண்ணின் குடும்பத்தினர் ஓக்லஹோமா ஆளுநர் மற்றும் சிறை பரோல் வாரியத்திற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.ஓக்லஹோமாவின் ஆளுநர் கெவின் ஸ்டிட் ஆண்டர்சனை விடுதலை செய்த ஒப்புதல் செய்த போது, அவர் 20 ஆண்டு சிறைத்தண்டனையை வெறும் மூன்றாண்டுகள் மட்டுமே அனுபவித்திருந்தார்.அமெரிக்க அரசு சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க சிறிய குற்றங்களை செய்தவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அந்த பட்டியலில் தவறுதலாக ஆண்டர்சன் பெயரும் இடம்பெற்றுள்ளது.இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என தற்போது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.