கவிஞர் லலித கோபன் எழுதிய காலாறப் போனவள் கவிதை நூல் அறிமுக விழா ஓய்வு நிலை கோட்டகல்விப் பணிப்பாளர் சீ. மதியழகன் தலைமையில் திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் 18 -03-2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் வி. மைக்கல் கொலினும், சிறப்பு அதிதியாக நீங்களும் எழுதலாம் கவிதை சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கமும் , கெளரவ அதிதிகளாக திருகோணமலை உயர் தொழிநூட்ப வளாகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவர் மா. தமிழ்ச்செல்வன், ஆங்கில விரிவுரையாளர் த . ஜீவகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நூல் பற்றிய உரைகளை கவிஞர்களான றியாஸ் குரானா, சி. கருணாகரன், க . டனிஸ்கரன் விமர்சகர்களான சுதர்மமகாராஜன், வ. முரளிதரன் ஆகியோர் வழங்குவார்கள்.