கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று(28) காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர், இ.இரவீந்திரன், வடமாகாண உள்ளுராச்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் என பலரும் கலந்து கொண்டனர்.