• Apr 20 2024

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனை வெளியிட்ட தகவல்!

Chithra / Jan 8th 2023, 7:46 am
image

Advertisement

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் டிசம்பர் 30 திகதி டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு காரில் சென்றபோது பயங்கரமான கார் விபத்தில் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து டெஹ்ராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.

இதற்கமைய,  மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இங்கு காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரிஷப் பண்டுக்கு முழங்காலில் நேற்று நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர் வேகமாக குணமடைந்து வருகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனை வெளியிட்ட தகவல் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் டிசம்பர் 30 திகதி டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு காரில் சென்றபோது பயங்கரமான கார் விபத்தில் பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து டெஹ்ராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.இதற்கமைய,  மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கு காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ரிஷப் பண்டுக்கு முழங்காலில் நேற்று நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர் வேகமாக குணமடைந்து வருகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement