புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பாக மாறுபட்ட நிலைப்பாடுகள் ஆராயப்பட்டு அதன் இறுதி தீர்மானம் நாளையதினம் நடைபெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் உறுதி செய்யப்படுமென ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழல் இடம்பெற்ற புதிய கூட்டணி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
அத்துடன் யாழ் மாநாகர முதல்வர் தெரிவு தொடர்பாக அந்த சபையின் உறுப்பினர்களே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.