இன்றைய உலகில் பெரும்பாலானோர் தமது ஓய்வு நேரங்களை கைத்தொலைபேசிகளுடனேயே கழித்து வருகின்றனர்.
அதேவேளை இரவுப் பொழுதில் படுக்கைக்கு சென்றாலும் அங்கும் தொலைபேசியை பயன்படுத்தியவாறு நீண்ட நேரம் நித்திரைக்கு செல்லாது இருக்கும் நிலைமையே பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்து தொலைபேசியை பயன்படுத்துபவர்களே ...
தலையின் மையப்பகுதியில் சுரக்கும் பினியல் சுரப்பி பற்றிய ஒரு ரகசியத்தை இந்தப் பதிவில் காண்போம்.
நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!! இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.
அதுதான் பினியல் சுரப்பி! கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது.
அதுதான் மெலடோனின் (melatonin)!! இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது. மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்.
இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்.அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும். ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது.
பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும். இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம். எனவே இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இயற்கை மருத்துவ உலக சித்தர்கள் நூல் கூறுகிறது. எனவே இனியாவது மேற்கூறிய நடைமுறைகளை எமது வாழ்வில் பின்பற்றி நலமாக வாழ்வோம்.
இரவில் செல்போன் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா இன்றைய உலகில் பெரும்பாலானோர் தமது ஓய்வு நேரங்களை கைத்தொலைபேசிகளுடனேயே கழித்து வருகின்றனர்.அதேவேளை இரவுப் பொழுதில் படுக்கைக்கு சென்றாலும் அங்கும் தொலைபேசியை பயன்படுத்தியவாறு நீண்ட நேரம் நித்திரைக்கு செல்லாது இருக்கும் நிலைமையே பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.இவ்வாறான நிலையில் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்து தொலைபேசியை பயன்படுத்துபவர்களே .தலையின் மையப்பகுதியில் சுரக்கும் பினியல் சுரப்பி பற்றிய ஒரு ரகசியத்தை இந்தப் பதிவில் காண்போம்.நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System) இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது.அதுதான் மெலடோனின் (melatonin) இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது. மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்.இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்.அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும். ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும். இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம். எனவே இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இயற்கை மருத்துவ உலக சித்தர்கள் நூல் கூறுகிறது. எனவே இனியாவது மேற்கூறிய நடைமுறைகளை எமது வாழ்வில் பின்பற்றி நலமாக வாழ்வோம்.