• Sep 29 2024

காதலால் வந்த வினை..! - பாலத்தில் இருந்து குதித்து உயிர்மாய்த்த 16 வயது சிறுமி..! இலங்கையில் சம்பவம் samugammedia

Chithra / Oct 20th 2023, 5:10 pm
image

Advertisement


தெஹிவளை - அத்திட்டிய பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து உயிர்மாய்த்துள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

அத்திட்டிய இகிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று (19) இரவு 10.20 மணியளவில் இந்த சிறுமி குதித்துள்ளார்.

அத்திட்டிய இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுமார் 6 மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹட்டன், டிக்கோயாவைச் சேர்ந்த பிரசன்னவதனி என்பதும், அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், அவர் பெல்லன்விலவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

காதல் தகராறு காரணமாக குறித்த சிறுமி  உயிர்மாய்த்துள்ளதாகவும், தெஹிவளை சந்தியில் உள்ள  கடை ஒன்றில் பணிபுரியும் போது, 29 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

காதலால் வந்த வினை. - பாலத்தில் இருந்து குதித்து உயிர்மாய்த்த 16 வயது சிறுமி. இலங்கையில் சம்பவம் samugammedia தெஹிவளை - அத்திட்டிய பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து உயிர்மாய்த்துள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.அத்திட்டிய இகிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று (19) இரவு 10.20 மணியளவில் இந்த சிறுமி குதித்துள்ளார்.அத்திட்டிய இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுமார் 6 மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் ஹட்டன், டிக்கோயாவைச் சேர்ந்த பிரசன்னவதனி என்பதும், அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், அவர் பெல்லன்விலவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.காதல் தகராறு காரணமாக குறித்த சிறுமி  உயிர்மாய்த்துள்ளதாகவும், தெஹிவளை சந்தியில் உள்ள  கடை ஒன்றில் பணிபுரியும் போது, 29 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement