• Apr 18 2024

அமெரிக்கா சொகுசு வாழ்க்கை; வஞ்சக திட்டம்போட இந்தியருக்கு நேர்ந்த கதி!

Tamil nila / Dec 15th 2022, 12:09 pm
image

Advertisement

அமெரிக்காவில் தனது இரட்டை சகோதரன் இறந்ததாக கூறி போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.


புதுடெல்லி, டெல்லியை சேர்ந்தவர் ஜஸ்விந்தர் சிங் (வயது 26). இவர் அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எந்த வழியிலாவது அமெரிக்கவாசியாகிவிட வேண்டும் என்று வஞ்சகமாக திட்டமிட்டாா்.


இந்நிலையில்,  அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரன் இறந்துவிட்டதாக கூறி, இறுதிச்சடங்கிற்கு செல்ல வேண்டும் என கூறி விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.


அதோடு, இதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்திருந்த நிலையில் அவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவுக்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர்.



ஜஸ்விந்தர் சிங்கை பிடித்து டெல்லி பொலிசாாிடம் ஒப்படைத்தனர். பொலிசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்விந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்க அமெரிக்காவில் இருந்து உதவியவரையும் பொலிசார் வழக்கில் சேர்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   



அமெரிக்கா சொகுசு வாழ்க்கை; வஞ்சக திட்டம்போட இந்தியருக்கு நேர்ந்த கதி அமெரிக்காவில் தனது இரட்டை சகோதரன் இறந்ததாக கூறி போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.புதுடெல்லி, டெல்லியை சேர்ந்தவர் ஜஸ்விந்தர் சிங் (வயது 26). இவர் அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எந்த வழியிலாவது அமெரிக்கவாசியாகிவிட வேண்டும் என்று வஞ்சகமாக திட்டமிட்டாா்.இந்நிலையில்,  அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரன் இறந்துவிட்டதாக கூறி, இறுதிச்சடங்கிற்கு செல்ல வேண்டும் என கூறி விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.அதோடு, இதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்திருந்த நிலையில் அவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவுக்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர்.ஜஸ்விந்தர் சிங்கை பிடித்து டெல்லி பொலிசாாிடம் ஒப்படைத்தனர். பொலிசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்விந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்க அமெரிக்காவில் இருந்து உதவியவரையும் பொலிசார் வழக்கில் சேர்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   . 

Advertisement

Advertisement

Advertisement