மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா நேற்றையதினம்(29) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும் 8ஆம் திகதி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் நேற்றையதினம்(29) மாலை பங்குத்தந்தை, அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் கிராம மக்கள் இணைந்து கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 7 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 8 ஆம் திகதி காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.
தொடர்ந்து 25 ஆம் திகதி இயேசு பிறப்பு விழாவும், ஜனவரி முதலாம் திகதி புதுவருடப்பிறப்பு திருவிழாவும்,ஜனவரி 06 ஆம் திகதி மூவரசர் திருவிழா( காணிக்கைப் திருவிழா )இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.samugammedia மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா நேற்றையதினம்(29) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும் 8ஆம் திகதி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் நேற்றையதினம்(29) மாலை பங்குத்தந்தை, அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் கிராம மக்கள் இணைந்து கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 7 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 8 ஆம் திகதி காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.தொடர்ந்து 25 ஆம் திகதி இயேசு பிறப்பு விழாவும், ஜனவரி முதலாம் திகதி புதுவருடப்பிறப்பு திருவிழாவும்,ஜனவரி 06 ஆம் திகதி மூவரசர் திருவிழா( காணிக்கைப் திருவிழா )இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.