மன்னார் கரிசல் கிராமத்தில் அமைந்துள்ள கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கதவுகள் உடைத்து உண்டியல் உட்பட நற்கருணை கிண்ணம் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலாய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இனந்தெரியாத விஷமிகளால் நேற்று(9) இரவு இடம் பெற்றுள்ளதாக ஆல நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் (10) வவுனியா தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.