சமூகத்தில் கண்டறியப்படாத "கிளௌகோமா" நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கிளௌகோமா காரணமாக குருட்டுத்தன்மை ஏற்பட்டால் அதனை மீளப்பெற முடியாது எனவும், குருட்டுத்தன்மையை தடுப்பதற்கு மாத்திரமே வழிகள் இருப்பதாகவும் கண் வைத்திய நிபுணர் டாக்டர் தில்ருவானி ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
கிளௌகோமா நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும்.
இப்போது கூட சமூகத்தில் கண்டறியப்படாத நோயாளிகள் இருப்பதாகவும், கண்டறியப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோமா வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார். எனவே நீரிழிவு நோயாளிகள் வருடத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.